தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி: மும்பையில் அ.தி.மு.க.வினர் உற்சாக கொண்டாட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி: மும்பையில் அ.தி.மு.க.வினர் உற்சாக கொண்டாட்டம்

சனி, மே 21,2016,

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை மும்பையில் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

அ.தி.மு.க. வெற்றி

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கட்சி தனிபெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தொண்டர்கள் தலைமை அலுவலகம் முன் ஆடிப்பாடி கொண்டாடினர். மேலும் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டனர்.

வெற்றி கொண்டாட்டம்

இந்த வெற்றி கொண்டாட்டத்தில் மாநில செயலாளர் கே.எஸ். சோமசுந்தரம், மாநில அவைத்தலைவர் சந்திரசேகர் சீத்தாகேம்ப் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தாராவி பகுதி அவைத்தலைவர் பி.வி. பாண்டியன், கிருஷ்ணன் பொது குழு உறுப்பினர்கள் சந்திரன், ஏ.முத்து, சுந்தரபாண்டியன், எஸ். முத்து, தங்கவேல், செந்தில்குமார், ராஜசீலன், முருகன் மற்றும் கட்சி மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல அ.தி.மு.க.வின் வெற்றியை சயான் கோலிவாடாவில் உள்ள எம்.ஜி.ஆர். சந்திப்பு பகுதியிலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் அவைத்தலைவர் ஏ.ஆர். சிகாமணி, மாநில பொருளாளர் ஆர்.கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ். மணி, வி.கணேஷ், தொகுதி அவைத்தலைவர் காவேரி, செயலாளர் தங்கமணி, பொருளாளர் சவுந்தரராஜன், விருத்தீஷ்வரன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.