தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

திங்கள் , டிசம்பர் 12,2016,

இலங்கை கடற்படையினர், தமிழக அப்பாவி ஏழை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக,ஒ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மீனவர் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரையில் தீர்வு எட்டப்படாததால், தமிழக மீனவர்களை பயங்கரவாதிகள் போல் பாவித்து, இலங்கை கடற்படையினர் கொடூரமான தாக்குதல் நடத்துவதாக அவர் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி சுட்டிக்காட்டியதுபோல், கச்சத்தீவை மீட்பதே, தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதிசெய்யும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்துள்ள 15 தமிழக மீனவர்களையும், 107 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.