தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்பு : ஃபிரான்ஸ் நாட்டில் இனிப்பு வழங்கி தமிழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்பு : ஃபிரான்ஸ் நாட்டில் இனிப்பு வழங்கி தமிழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

வியாழன் , மே 26,2016,

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா, 6-வது முறையாக பதவியேற்றிருப்பது, உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதைத் தொடர்ந்து, ஃபிரான்ஸ் நாட்டில், இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா, 6-வது முறையாக பதவியேற்றுள்ளதை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டில் செயல்படும் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், தலைநகர் பாரீஸில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சரின் படத்துடன் “இரட்டை இலை” பதித்த ஆயிரம் இனிப்பு கேக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.