தருமபுரி மாவட்டக் கழகம் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளின் பொறுப்புகள் மாற்றியமைப்பு :முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தருமபுரி மாவட்டக் கழகம் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளின் பொறுப்புகள் மாற்றியமைப்பு :முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, மார்ச் 20,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தருமபுரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாளர் பொறுப்பில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திரு. கே.பி.அன்பழகன் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணித்தலைவர் பொறுப்பில், பாலக்கோடு வட்டத்தைச் சேர்ந்த திரு.ஆர்.சின்னசாமியும், தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரான திரு.பூக்கடை எம்.முனுசாமியும் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. டி.எம்.பெரியசாமி விடுவிக்கப்படுவதாகவும், அவர் ஏற்கனவே வகித்து வரும் தருமபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.பூக்கடை எம்.முனுசாமி, தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ஆர்.சின்னசாமி ஆகியோர், இன்றுமுதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கழகத்தினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.