தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

வெள்ளி, ஏப்ரல் 22,2016,

தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் அருகில் கல்லூரி மாணவர்கள், பயணிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
 கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி வாக்கு சேகரித்தார். “”மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற லட்சியத்துடன் தமிழக மக்கள் நலனுக்காக நாளும் உழைத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மடிக்கணினி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு உங்கள் நல்லாதரவை அளிக்கும் வகையில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரித்தார்.