திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம்

திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம்

சனி, அக்டோபர் 22,2016,

திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக மு.க.அழகிரியின் மகன் தயாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் கிண்டலடித்து விமர்சித்துள்ளார். 

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது.

அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமியும் தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் டாக்டர் சரவணனை களம் இறக்கியுள்ளது திமுக.
 
திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திமுக நிறுத்தியுள்ளதை மு.க.அழகிரியின் மகன் தயாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்து விமர்சித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட சரவணனைவிட நல்ல வேட்பாளர் மதுரை திமுகவில் இல்லை என்பதை நினைக்கும்போது, கவலையாக உள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய அவர் கடைசியில் காசு பணம் துட்டு மணி மணி என குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.