திருத்துறைப்பூண்டியில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி மீது தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் : தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் கைது

திருத்துறைப்பூண்டியில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி மீது  தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் : தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் கைது

சனி, மே 28,2016,

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததால், திருத்துறைப்பூண்டி அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி மீது, தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக, கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர்களால் ஓரங்கட்டப்பட்ட தி.மு.க.வினர், அராஜக செயல்களை அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அ.இ.அ.தி.மு.க. கிளைச் செயலாளர் திரு. கவிக்குமார், நடைபெற்று முடிந்த தேர்தலில், கழகத்திற்காக தீவிரமாக பணியாற்றியதோடு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி, தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தார். இந்நிலையில், தேர்தல் முன்விரோதம் காரணமாக தி.மு.க.வைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் தூண்டுதலின்பேரில், தி.மு.க. அடியாட்கள், திரு. கவிக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கவிக்குமாருக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.