திருநின்றவூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

திருநின்றவூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை  மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

புதன், ஏப்ரல் 27,2016,

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா திருநின்றவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 தேர்தல் அலுவலகத்தை ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்துப் பேசியதாவது:
 தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா அலை வீசுகிறது. மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற உயரிய லட்சியத்தோடு, தவ வாழ்க்கையை ஏற்று தமிழ் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் மகத்தான தலைமையின் கீழ் பொற்கால ஆட்சி தொடர அதிமுக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.
 குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் எதிர்க் கட்சிகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் தெளிந்த நீரோடை போல் அதிமுக செல்கிறது என்றார். திருநின்றவூர் நகரச் செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.