திருநெல்வேலி மாவட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாய்மார்கள் மனமார்ந்த நன்றி

திருநெல்வேலி மாவட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாய்மார்கள் மனமார்ந்த நன்றி

திங்கள் , ஆகஸ்ட் 01,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா,பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை திறக்க உத்தரவிட்டதன் பேரில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனி அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாய்மார்கள்  மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம், தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள பேருந்து நிலையங்களில், பாலூட்டுவதற்கான தனி அறைகள் திறக்கப்பட்டுள்ளன. குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் அறை சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தாய்மார்கள் தெரிவித்துக் கொண்டனர்.