திருப்பூரில் முதலமைச்சர் நலம்பெற வேண்டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு வழிபாடு

திருப்பூரில் முதலமைச்சர் நலம்பெற வேண்டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு வழிபாடு

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21, 2016,

திருப்பூர் ; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி திருப்பூர் பூலுவபட்டி, கே.ஜி.எஸ்.தனியார் பள்ளி மாணவ,மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந் நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி,திருப்பூர் பூலுவபட்டி, கே.ஜி.எஸ்.தனியார் பள்ளி மாணவ,மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன்,பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைபுத்தூர் நடராஜன் உள்பட மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.