திருவாடானை தொகுதியில் தோல்வியடைந்த தி.மு.க வினர் வன்முறை : அ.இ.அ.தி.மு.கவினர் மீது கல்வீசி தாக்குதல்

திருவாடானை தொகுதியில் தோல்வியடைந்த தி.மு.க வினர் வன்முறை : அ.இ.அ.தி.மு.கவினர் மீது கல்வீசி தாக்குதல்

வெள்ளி, மே 20,2016,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அ.இ.அ.தி.மு.கவினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் கழக பிரமுகரின் கார் சேதமடைந்தது.

திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க தோழமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்தார். இந்தத் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத தி.மு.க.வினர், திருவாடானை தொகுதிக்குட்பட்ட ஓம்சக்தி நகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அ.இ.அ.தி.மு.க.வினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், கழக பிரமுகர் திரு. நாகசாமி என்பவரின் கார் சேதமடைந்தது. தி.மு.கவினரின் வன்முறை குறித்து, கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.