தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது முதலமைச்சர் ஜெயலலிதாதான் : சட்டப்பேரவையில் அமைச்சர் P. தங்கமணி தகவல்

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது முதலமைச்சர் ஜெயலலிதாதான் : சட்டப்பேரவையில் அமைச்சர் P. தங்கமணி தகவல்

புதன், ஜூன் 22,2016,

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் திட்டத்திற்கான அரசாணையை ஆராய்ந்து அத்திட்டத்தை தடுத்து நிறுத்தியது முதலமைச்சர் ஜெயலலிதாதான் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மீத்தேன் திட்டம் குறித்து தெரிவித்த தவறான தகவலுக்கு, மறுப்பு தெரிவித்து, பதிலளித்து பேசிய அமைச்சர் திரு. P. தங்கமணி, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் அரசாரணை வெளியிடப்பட்டதாகவும், அதனை ஆராய்ந்து அத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நிறுத்திவைத்ததாகவும் தெரிவித்தார்.