தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

திங்கட்கிழமை, ஜூலை 04, 2016,

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், கும்பகோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அக்கட்சிகளில் இருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணி தலைவி சாலோன்சால், மாவட்ட செயலாளர் திரு. தேவசகாயம், இளைஞர் அணி பொதுச் செயலாளர் திரு. பிரவீன் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர், அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க., த.மா.கா, பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 125 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். இதில், அமைச்சர் திரு. ஆர். துரைக்கண்ணு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.கே. பாரதிமோகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், செயல் வீரர்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், திருவேற்காட்டை அடுத்த வேலப்பன் சாவடியில் நடைபெற்றது. இதில், தி.மு.க, ம.தி.மு.க, உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த 60 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.