தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016,

தமிழக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் நேற்று ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் அம்மாவட்டத்தின் தி.மு.க. செயலாளராக கடந்த 1987-1993 ஆண்டுகளுக்கிடையே பொறுப்பு வகித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய இவர், கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று 2006-2011 ஆண்டுகளுக்கிடையே தி.மு.க. தலைமையில் அமைந்த தமிழ்நாடு அரசில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.சமீபத்தில், தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அக்கட்சியில் இருந்து விலக தீர்மானித்த செல்வராஜ், இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.