தூத்துக்குடி மற்றும் குளச்சல் துறைமுகத்தினை மத்திய அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நன்றி

தூத்துக்குடி மற்றும் குளச்சல் துறைமுகத்தினை மத்திய அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நன்றி

ஞாயிறு, ஜூலை 10,2016,

தூத்துக்குடி – குளச்சல் துறைமுகத்தினை மத்திய அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அமைய உள்ள துறைமுகத்தினை மத்திய அரசே ஏற்று நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இங்கு துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இத்துறைமுகம் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்காக தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.