தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து, முக்கிய பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் அரசு பேருந்து சேவை தொடக்கம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து, முக்கிய பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் அரசு பேருந்து சேவை தொடக்கம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

செவ்வாய், நவம்பர் 08,2016,

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ, கார் மூலம் அதிக கட்டணம் கொடுத்து பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்று வருவதை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ரயில் நிலையத்திலிருந்து, பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் பேருந்து சேவையை தொடங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், மகிழ்ச்சி ரயில் பயணிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.