தொற்று நோய்களின் பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா : சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர் பேச்சு நேற்று

தொற்று நோய்களின் பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா : சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர் பேச்சு நேற்று

புதன், ஆகஸ்ட் 03,2016,

சென்னை:தமிழ்நாட்டுமக்களை டெங்கு தொற்று நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக காப்பாற்றியவர் முதல்வர் ஜெயலலிதாதான் என்று சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் டெங்கு நோய் கட்டுப்படுத்துவது குறித்து திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  பதிலளித்து பேசினார். அப்போது அவர் அளித்த பதில் வருமாறு:-

பொதுவாக பருவகாலங்களில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் தொற்று நோய்களின் தாக்கம்பெரும் சவாலாக உள்ளது. உலகத்திலே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு காய்ச்சல்உள்ளது. உள்ளாட்சி, பள்ளிக் கல்வி மற்றும் சமூக நலத்துறைகளோடு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து முதல்வர் ஜெயலலிதா எடுத்த முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திலே டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று  நோய்கள் முழுக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
ஏற்கனவே உலகத்தையே அச்சுறுத்திய வைரஸ்  காய்ச்சல் இன்றைக்கும் உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஜிகா வைரஸ், குஜராத்  மாநிலத்தை புரட்டிப்போட்டு உயிர் பலி வாங்கிய பன்றிக் காய்ச்சல்) இந்திய தலைநகர் புதுடெல்லியைப் புரட்டிப்போட்ட டெங்கு காய்ச்சல் இவையெல்லாம் அச்சுறுத்தியபோது கூட, தமிழ்நாட்டு மக்களை முதல்வர் ஜெயலலிதா டெங்கு தொற்று நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக காப்பாற்றியுள்ளார்.

இன்றைக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலே இந்திய அளவிலே முன்னிடத்தைப் பெற்று நோயாளிகளைக் காக்கின்ற முதல்வர் ஜெயலலிதாவின் அரசு சாதாரண காய்ச்சலாலே  ஒருவர் இறக்கின்றார் என்ற நிலையை ஒருபோதும் அனுமதிக்காது. அரசு கொசு ஒழிப்புப்  பணிகளுக்காக ரூ.33.6 கோடி நிதி ஒதுக்கி 18,165 களப்பணியாளர்களை அமர்த்தி, விழிப்புணர்வு நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர்களுடைய ஆலோசனை பெறாமல் மருந்து கடைகளிலே தனியாக மருந்துகளைவிநியோகம் செய்யாமல் தடுக்கின்ற நடவடிக்கைகள், போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை,போன்ற பல்வேறு பன்முக நடவடிக்கைகள் மூலம் அரசுஇன்றைக்கு தமிழகத்தை நோயற்ற மாநிலமாக  உருவாக்கியுள்ளது.இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.