தேர்தல் அறிக்கை அல்ல தி.மு.க. வெளியிட்டது தேறாத அறிக்கை விந்தியா பேச்சு

தேர்தல் அறிக்கை அல்ல தி.மு.க. வெளியிட்டது தேறாத அறிக்கை விந்தியா பேச்சு

வியாழன் , மே 12,2016,

தி.மு.க. வெளியிட்டது தேர்தல் அறிக்கை அல்ல. அது தேறாத அறிக்கை என்று நடிகை விந்தியா பேசினார்.
தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார். கூடலூரில் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்தும், ராசிங்காபுரம், போடியில் போடி தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும், தேனி அல்லிநகரத்தில் பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் கதிர்காமுவை ஆதரித்தும் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது நடிகை விந்தியா பேசியதாவது:–
தேர்தல் அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி என தெரிந்தது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு மாபெரும் வெற்றி என்பது உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதி விலையில் இருசக்கர வாகனம் என பல்வேறு திட்டங்களை முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார்.
தேறாத அறிக்கை 
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் அறிக்கை அல்ல. அது தேறாத அறிக்கை. தி.மு.க.வினர் கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு இப்போது கச்சத்தீவை மீட்பேன் என்கிறார்கள். விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர். என்று பிரேமலதா சொல்கிறார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா நெருப்பு எம்.ஜி.ஆர். நடைபெற உள்ள தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் போர் என்கிறார்கள். தர்மம் என்றும் தனியாக நின்று வெற்றிபெறும். அதர்மம் தான் ஆள் சேர்த்து வந்து தோற்கும்.இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.