தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ செம்மலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு : தோளில் சுமந்து கொண்டாட்டம்

தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ செம்மலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு : தோளில் சுமந்து கொண்டாட்டம்

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2017,

ஓமலுார் : சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு சென்ற எம்.எல்.ஏ செம்மலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.சிறப்பான வரவேற்பு அளித்த, அ.தி.மு.க.,வினர், அவரை, தோளில் சுமந்து ஊர்வலம் சென்றனர்.

பன்னீர்செல்வம் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் சொந்த தொகுதிக்கு செல்லத் துவங்கி உள்ளனர். அவர்களை, கட்சியினர் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர்.இந்நிலையில் சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., செம்மலை, நேற்று காலை, ஓமலுாருக்கு வந்தார். அப்போது, பன்னீர்செல்வம் மற்றும் தீபா ஆதரவாளர்கள் பலர், செம்மலைக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.பட்டாசு வெடித்து, உற்சாக வரவேற்பு கொடுத்தனர். உற்சாகத்தில் அவரை தோளில் துாக்கி சுமந்து, மேட்டூர் சாலை பஸ் ஸ்டாப் வரை, ஊர்வலமாக வந்தனர்.