தோல்வி பயம் காரணமாக, தி.மு.க.வினர் விதிமீறல் : நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு பணம் பட்டுவாடா

தோல்வி பயம் காரணமாக, தி.மு.க.வினர் விதிமீறல் : நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு பணம் பட்டுவாடா

ஞாயிறு, மார்ச் 20,2016,

தோல்விபயம் காரணமாக, தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர், நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பெண்களுக்கு பணம் கொடுத்த காட்சி, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுனில், நேற்று தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு, பணம் தருவதாகக் கூறி, ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பொதுக்கூட்டம் முடிந்த பின்னரும் பணம் தரப்படாததால், மேடை அருகே சூழ்ந்த பெண்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுத்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி, பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுத்த காட்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.