நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “மக்கள் தலைவர்” விருது ; அமெரிக்காவின் Festival of Globe அமைப்பு வழங்கியது

நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “மக்கள் தலைவர்” விருது ; அமெரிக்காவின்  Festival of Globe அமைப்பு வழங்கியது

வெள்ளி, செப்டம்பர் 02,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் சேவைகளைப் பாராட்டி, அவருக்கு “மக்கள் தலைவர்” என்ற பட்டத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சிலிக்கான் வேலி என்ற இடத்தில் கடந்த மாதம் 13, 14-ம் தேதிகளில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் ரமேஷ் ஜப்ரா நிறுவிய Festival of Globe அமைப்பின் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அவரது மக்கள் நலத்திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஆகியவற்றுக்காக “மக்கள் தலைவர்” விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில், அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி திரு.அசோக் வெங்கடேசன், குப்பர்டினோ துணைமேயர் சவீதா வைத்தியநாதன், கலிஃபோர்னியா அசெம்ளி உறுப்பினர்கள், பில் கிர்க், கன்சென் சூ ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.