நாளை திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா

நாளை திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா

வெள்ளி, ஏப்ரல் 22,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா நாளை(சனிக்கிழமை) திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் 7 தொகுதிகளில் களம் காண்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர்கள்-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை கடந்த 9-ந்தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கினார்.

11-ந்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலும், 13-ந் தேதி தர்மபுரியிலும், 15-ந்தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும், 18-ந்தேதி காஞ்சீபுரத்திலும், 20-ந்தேதி சேலத்திலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டம் வாயிலாக பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சியில் நாளை(சனிக் கிழமை) பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.