பள்ளிவாசல்களுக்கு விலையில்லா உயர்தர அரிசி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி நன்றி

பள்ளிவாசல்களுக்கு விலையில்லா உயர்தர அரிசி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி நன்றி

செவ்வாய், ஜூன் 28,2016,

ரமலான் நோன்பையொட்டி பள்ளிவாசல்களுக்கு விலையில்லா உயர்தர அரிசி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மனிதநேய ஜனநாயகக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு. தமீமுன் அன்சாரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, நோன்பின் சிறப்பு குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு. தமீமுன் அன்சாரி, முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கும், தங்கள் கட்சிக்கும் மதிப்பளித்து வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், ரமலான் நோன்புக்கு விலையில்லா உயர்தர அரிசி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமிய மக்கள் சார்பில் தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, திண்டுக்கல் பேகம்பூர் ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அரிஹரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. உதயகுமார் மற்றும் மும்மதத்தினர் கலந்து கொண்டனர்.