பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது விபத்தில் பலியான தமிழக வீரருக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி : குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது விபத்தில் பலியான தமிழக வீரருக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி : குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

செவ்வாய், மே 31,2016,

அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ராமசாமியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், போதிநாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ராமசாமி எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 19-ம் தேதி உயிரிழந்ததாகக் குறிப்பிட்டு, ராணுவ வீரர் ராமசாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.