பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, செப்டம்பர் 10,2016,

சென்னை : ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளார்.

பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்தார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

தங்கம் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை. பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை.மாரியப்பனின் சாதனை இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.