புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலைமைச்சருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலாளர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலைமைச்சருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு.வெல்லமண்டி என்.நடராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வி.அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் திரு.சி.த.செல்லபாண்டியன், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.K.R.P.பிரபாகரன் எம்.பி ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.