பென்னாகரம், வேப்பனஹள்ளி தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பென்னாகரம், வேப்பனஹள்ளி தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 08,2016,

மே மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் கே.பி. முனுசாமியும், வேப்பனஹள்ளி தொகுதியில் ஏ.வி.எம்.மது என்கிற ஹேம்நாத் ஆகியோர் போட்டியிடுவார்கள் என  முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.,

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக கே.பி.முனுசாமி அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்றும், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்குப் பதிலாக ஏவிஎம்.மது என்கிற ஹேம்நாத் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.