பெல்ஜியத்தில் என்ஜினீயர் ராகவேந்திரன் கணேசன் பலி : முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

பெல்ஜியத்தில் என்ஜினீயர் ராகவேந்திரன் கணேசன் பலி : முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய், மார்ச் 29,2016,

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் ராகவேந்திரன் கணேசன் பலியானதை அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன். இது மிகவும் துயரமான சம்பவமாகும்.

ராகவேந்திரன் கணேசன் பிரசல்சில் பணிபுரிந்தார். அவர் இதயமில்லா தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி விட்டார். இது அவரது மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகியோருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.இந்த நேரத்தில் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.