பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு,அவரது திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு,அவரது திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை

வெள்ளி, செப்டம்பர் 16,2016,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாளான நேற்று காலை, சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக பிறந்த நாள் விழா சிறப்பு மலரையும் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பிரதியை கழக மகளிரணி இணைச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.