மகிழ்ச்சி செய்தி ; முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றுவிட்டார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்

மகிழ்ச்சி செய்தி ; முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றுவிட்டார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்

செவ்வாய்கிழமை, அக்டோபர் 25, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் முழுமையாக குணமடைந்து இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்தார்.

காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்கா மருத்துவர் ரிச்சர்ட், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக முதலமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல்நலம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அவர் தெரிவித்தார்.