மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலமானார்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலமானார்

புதன், மே 25,2016,

அண்மையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சீனிவேல்(வயது 65). தேர்தல்  முடிந்ததும் கடந்த 17 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சீனிவேல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 
இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் காலை 7.30 மணியளவில் சீனிவேல் உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 93,453 வாக்குகள்  பெற்ற சீனிவாசன் திமுக வேட்பாளர் மணி மாறனை 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.
15வது சட்டசபை இன்று கூடி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க உள்ள  நிலையில் சீனிவேலுவின் மரணம் அதிமுகவினரை கவலை அடைய வைத்துள்ளது.