மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலக நாடுகள் இரங்கல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலக நாடுகள் இரங்கல்

புதன், டிசம்பர் 07,2016,

சென்னை ; சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே நேற்று, 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.இந் நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.

இதே போல இந்தியாவுக்கான அமெரிக்க, இஸ்ரேல், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா தூதரகங்களும் இரங்கல் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அப்துல் பஷீத் தனது டுவிட்டரில் “முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இதயப்பூர்வ இரங்கல்” என குறிப்பிட்டிருந்தார்.