மறைந்த முதல்வர் அம்மா வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்துவேன் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் அம்மா வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்துவேன் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஆகஸ்ட் 23 , 2017 , புதன்கிழமை,

சென்னை : தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்துவேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்றது குறித்து டுவிட்டரில் துணை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவு செய்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கழக ஒருங்கிணைப்பாளராக அம்மாவின் வழியில் கழகத்தை வழிநடத்துவேன். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் சூழலை அம்மாவின் ஆன்மா ஏற்படுத்தி கொடுத்தது. தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தன என டுவிட்டரில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.