மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

வியாழக்கிழமை, பிப்ரவரி 09, 2017,

சென்னை ; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.