மறைந்த முதல்வர் ஜெயலலிதா ’தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்’ ; மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ’தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்’ ;  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புகழாரம்

வியாழன் , டிசம்பர் 08,2016,

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மவுனம் அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா, தமிழகத்தில் தன்னிகரற்ற தலைவராகவும், பெண்ணுரிமையைப் போற்றுபவராகவும் திகழ்ந்ததாகவும் அந்த கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.