மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா, விஷு தின வாழ்த்து

மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா, விஷு தின வாழ்த்து

வியாழன் , ஏப்ரல் 14,2016,

மலையாள மொழி பேசும் மக்களுக்கு, முதலமைச்சர்  ஜெயலலிதா, விஷு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு மலரட்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள விஷு தின வாழ்த்து செய்தியில், மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு திருநாளாம் “விஷு” திருநாளில், மலையாள மக்கள் அனைவருக்கும் தமது மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகில் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிக் காத்து வாழும் மலையாள மக்கள் விஷு பண்டிகையன்று, தங்கள் இல்லங்களில் அரிசி, காய் கனிகள், கொன்றை மலர், தங்க நாணயங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக் கனியை முதலில் கண்டு, வரும் இந்தப் புத்தாண்டு தங்கள் வாழ்வில் நலமும், வளமும் செழிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டி வழிபடுவார்கள் – இப்புத்தாண்டு திருநாளில் உற்றார் உறவினர்களுடன் ஒன்று கூடி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு அறுசுவை விருந்துண்டு மகிழ்வார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்தாண்டு மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை தமது “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.