மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாள் : திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாள் : திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வெள்ளி, செப்டம்பர் 02,2016,

திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவனின் 301-வது பிறந்த நாளையொட்டி, நேற்று நெற்கட்டும்செவல் கிராமத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் திரு.G.பாஸ்கரன், திருமதி V.M. ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு. கருணாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.