முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சிங்கப்பூர், ஜப்பான் தூதர்கள் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சிங்கப்பூர், ஜப்பான் தூதர்கள் சந்திப்பு

சனிக்கிழமை, மார்ச் 11, 2017,

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேற்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் தூதர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். முதலமைச்சராக பொறுப்பேற்றமைக்காக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரின் வாழ்த்துக் கடிதத்தை சிங்கப்பூர் தூதர் முதலமைச்சரிடம் வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதர்  ராய் கோ மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்து சிங்கப்பூர் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தார். முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமியை நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டின் தூதர் சைஜி பாபா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் ஹிரோகோ டானிகூச்சி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.