முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை – நத்தம் விஸ்வநாதன் பெருமிதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை – நத்தம் விஸ்வநாதன் பெருமிதம்

செவ்வாய், மே 10,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தினால் தென்மாநிலங்களில் தமிழகம் மட்டுமே மின்வெட்டில் இருந்து தப்பியுள்ளதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சித்தையன்கோட்டை பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரம் இருந்த நேரத்தை விட, மின்வெட்டு இருந்த நேரம் தான் அதிகம் என தெரிவித்தார்.

பின்னர் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களினால் தமிழகம் மட்டும் மின்வெட்டு பிரச்சனையில் இருந்து தப்பி விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.