முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் அரசு திட்டங்கள் மக்களை தேடி சென்றடைகின்றது : சட்டபேரவையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் அரசு திட்டங்கள்  மக்களை தேடி சென்றடைகின்றது : சட்டபேரவையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தகவல்

செவ்வாய், ஜூலை 26,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் மக்களை தேடி அரசு திட்டங்கள் சென்றடைந்தன என சட்டபேரவையில் அமைச்சர் திரு. ஆர்.பி உதயகுமார் கூறினார்.

சட்டபேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் திரு. ஆர்.பி உதயகுமார், அரசு நலத்திட்டங்களை பெற அதிகாரிகளை தேடி மக்கள் சென்ற நிலைமாறி, மக்களை தேடி அரசு அதிகாரிகள் நேரில் சென்று நலத்திட்டங்களை வழங்கியது முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் என தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் நாட்டு நடப்பை அறியாமல் பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.