முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது ; மலேசிய முன்னாள் அமைச்சர் கோகிலம்பிள்ளை பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது ; மலேசிய முன்னாள் அமைச்சர் கோகிலம்பிள்ளை பாராட்டு

திங்கள் , ஆகஸ்ட் 22,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சர் கோகிலம்பிள்ளை பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொள்ள வருகை தந்த மலேசிய நாட்டின் முன்னாள் வணிக மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் கோகிலம் பிள்ளை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஜெயலலிதா கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாகப் பாராட்டு தெரிவித்தார். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை குறிப்பிட்ட அவர், இதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.