முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இன்னும் ஒரிரு நாட்களில் செய்திகளை ஊடகங்களுக்கு அவரே வழங்குவார் ; தா.பாண்டியன்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இன்னும் ஒரிரு நாட்களில்  செய்திகளை  ஊடகங்களுக்கு அவரே வழங்குவார் ; தா.பாண்டியன்

திங்கள் , அக்டோபர் 24,2016,

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீண்டும் நலம் விசாரித்தார்.முதல்வரே இன்னும் ஒரிரு நாட்களில்  ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குவார் என்று தா.பாண்டியன் தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் இன்று 2-வது முறையாக வந்தார். பாராளுமன்றத்துணை சபாநாயகர் தம்பிதுரை, நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். இதன் பின்னர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் மேலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் செய்திகளை ஊடகங்களுக்கு அவரே வழங்குவார். அமைச்சர்களிடம் முன்பு பார்த்த முகமலர்ச்சியை விட, இப்போது நல்ல முகமலர்ச்சியுடன், இருப்பதையும், அவர்கள் கூறுவதையும் வைத்து பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.