முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம்

வெள்ளி, மே 06,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில், இன்று சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். மேலும் 5 இடங்களில் பொதுமக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டுகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று நேரில் சென்று, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட, காசிமேடு பெட்ரோல் பங்க் அருகில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து, தமது தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் தொடங்குகிறார். இதனையடுத்து, சூரிய நாராயண செட்டி தெரு- ஜீவரத்தினம் சாலை சந்திப்பில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, பொதுமக்களிடையே உரையாற்றி, இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்ந்து, சூரிய நாராயண செட்டித் தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, சேனியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். மார்க்கெட் தெரு, வ.உ.சி. சாலை சந்திப்பில், பொதுமக்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா எழுச்சியுரையாற்றி ஆதரவு திரட்டுகிறார்.

இதனையடுத்து, இளையமுதலி தெரு, வைத்தியநாதன் பாலம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, வைத்தியநாதன் பாலம் – எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் பொதுமக்களிடையே பேருரையாற்றி, இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்ந்து, எண்ணூர் நெடுஞ்சாலையில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, எண்ணூர் நெடுஞ்சாலை JJ நகர் சந்திப்பு மற்றும் மணலி சாலை – எழில் நகர் ஆகிய இடங்களில் பொதுமக்களிடையே எழுச்சியுரையாற்றி, ஆதரவு திரட்டுகிறார்.