முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ நிர்வாகம் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ நிர்வாகம் தகவல்

வெள்ளி, செப்டம்பர் 23,2016,

சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.  

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ நிர்வாகமும் தெரிவித்துள்ளது.முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அமைச்சர்கள் ,அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர்அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை தேறி வருவதால் விரைவில் வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.