முதலமைச்சர் ஜெயலலிதா பூரணமடைய வேண்டி கரூர் தர்ஹாவில் சிறப்பு தொழுகை

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணமடைய வேண்டி கரூர் தர்ஹாவில் சிறப்பு தொழுகை

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 14,

அ.தி.மு.க சார்பில், தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி நாள்தோறும் கோயில், மசூதி, தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கரூர் மாவடியான் கோயில் தெருவில் உள்ள பாச்சுமியான் தர்காவில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி சிறப்பு தொழுகைகள் நடைப்பெற்றது. மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் நடைப்பெற்ற இந்த தொழுகையில், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவுச் செயலாளர் சையத் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.