முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

வியாழன் , நவம்பர் 24,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் ஒன்றியக் கழகம் சார்பில், பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 108 தேங்காய் உடைத்து, பெருந்திரளானோர் பிரார்த்தனை நடத்தினர்.

திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூரில் அமைந்துள்ள ஸ்ரீசொர்ணாம்பாள் சமேத ஸ்ரீசொர்ணபுரிஸ்வரர் கோயிலில், ஸ்ரீமகா ருத்திர ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், ஸ்ரீஆயில்விருத்தி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ர நாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றன.

தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப்பணி உடலுழைப்பு பிலால்கள் நல சங்கம் சார்பில்,நேற்று  திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளி வாசல் மற்றும் ஜங்சன் பள்ளிவாசலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக் கழகம் சார்பில், கிறிஸ்தவ போதர்கள் மற்றும் கிறிஸ்துவப் பெருமக்கள் பங்கேற்ற கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை நடத்தினர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் பெரியார் நகர் பகுதி கழகம் சார்பில், கோட்டை பெருமாள் கோயிலில் உற்சவமூர்த்திக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியக் கழகம் சார்பில், மாடம்பாக்கம் ஸ்ரீ் லட்சுமி நாராயணர் கோயிலில் நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் நடத்தப்பட்டன. அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பீர்க்கங்கரனை பேரூராட்சி கழகம் சார்பில், புதுப்பெருங்களத்தூர் ஸ்ரீ்னிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், ஸ்ரீ்செல்வமுத்துக்குமாரசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பெருந்திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் முதலமைச்சருக்காக மனமுருக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.