முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி,ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி,ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

வெள்ளி, அக்டோபர் 21,

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரக் கழகம் சார்பில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி, ராமாநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரக் கழகம் சார்பில், பல்லாயிரக்கணக்கான பெண்கள், சில நாட்களுக்கு முன்பு, கையில் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை பரமக்குடி வைகை ஆற்றில் உள்ள பெருமாள் கோயில் படித்துறையில் இருந்து 10 ஆயிரத்து 8 பெண்கள், செண்டை மேளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் அருள்மிகு முத்தாலம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்த பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்று மனமுருக வழிபாடு நடத்தினர்.