முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் ஆதரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் ஆதரவு

புதன்கிழமை, மார்ச் 15, 2017,

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடியை சேர்ந்த அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் ஊர்காரர்கள் என 250க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவளித்தனர்.

சசிகலாவை எதிர்த்து வெளிய வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் அணி அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தீவிரமாக போராடி வருகிறது. 
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சின்னம் இரட்டை இலை தங்களுக்கு வேண்டுமென ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்கள் சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மற்ற மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்களே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்திருப்பது சசிகலா அணியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.