முதல்வர் ஜெயலலிதா அடுத்த வாரம் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்ற படுவார் என தகவல்

முதல்வர் ஜெயலலிதா அடுத்த வாரம் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்ற படுவார் என தகவல்

செவ்வாய், நவம்பர் 01,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா எழுந்து உட்காருகிறார்; நன்றாக பேசுகிறார்.இதனால் அடுத்த வாரம் முதலமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டது. இதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் என்ற 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அவ்வப்போது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றாலும், இடையிடையே வந்து முதலிமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்து வருகின்றனர். தற்போது, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, ஜூடி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் எழுதுவதற்கு அவர் பயிற்சி பெற்று வருகிறார்.

கடந்த 3 நாட்களாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்ந்து இருந்தால், ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச சிகிச்சையை மாற்றும் வகையில், தொண்டையில் மூச்சு விடுவதற்காக பொருத்தப்பட்டுள்ள குழாயை எடுத்துவிட்டு, அவரை இயற்கையாகவே சுவாசிக்க வைத்துவிடலாம் என்று டாக்டர்கள் வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.