முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி

ஞாயிறு,அக்டோபர் 16,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனையில் திரண்ட நிருபர்களிடம் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

அ. தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இன்று பவுர்ணமி திருநாள். காலை 6–30 மணி முதல் 7 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் அகல்விளக்கு தீபம் ஏற்றி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் இந்த தீப வழிபாட்டில் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற பிரார்த்தனை செய்தார்கள். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார். தமிழக மக்கள் செய்த பிரார்த்தனை வீண்போகவில்லை என்று சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.